கூட்டு அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நேற்றிரவு விலகியுள்ள நிலையில், நாளை மறுதினம் ஐ.தே.க அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றுமாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், சபாநாயகர் கரு ஜெயசூரியவும் மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய பேச்சுக்களின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் அமையவுள்ள புதிய அரசாங்கத்தில் தற்போதைய கூட்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த அமைச்சர்கள் பலரும் இணைந்து கொள்ளவுள்ளனர்.
அதேசமயம், மேலும் பல ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரணியில் இணையவுள்ளனர்.
இதுதொடர்பாக நேற்றிரவு ஐ.தே.க அமைச்சர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -