கிண்ணியா நகர சபையின் வழிகாட்டலில் பைசல் நகர் பகுதியில் டெங்கு சிரமதானம்


ஹஸ்பர் ஏ ஹலீம்-

கிண்ணியா நகரசபைக்குடபட்ட சகல பிரதேசங்களிலும் டெங்கு பரவும் அபாயத்தைத் தடுக்கும் நோக்கில் கிண்ணியா நகரசபையின் செயலாளரும், விசேட ஆணையாளருமாகிய என். எம். நௌபீஸ் தலைமையில் நேற்று சனிக்கிழமை(16)கிண்ணியா பைசல் நகர் பகுதியில் டெங்கு ஒழிப்பு சிரமதானம் நடைபெற்றது.

இதில் டெங்கு குடம்பிகளை ஒழிக்கும் வேலைத்திட்டம் அபாயத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர் இச் சிரமதானத்தின்போது கிராம அபிவிருத்திச்சங்கத்தின் அப்பகுதிக்கு பொறுப்பானவர்கள்,நகர சபை ஊழியர்கள், சிவில் பாதுகாப்பு அதிகாரிகள்,அப்பகுதி மக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு வடிகான்களை சுத்தம் செய்யும் பணியிலும் சிரமதானத்திலும் ஈடுபட்டு பல பகுதிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -