மு.இராமச்சந்திரன்-
உள்ளுராட்சி மன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் அதிகளவில் சேவல் சின்னத்தில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்கள் வேற்பு மனுவில் கையொப்பமிடும் நிகழ்வு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய ஆறுமுகம் தொண்டமான் தலைமையில் கொட்டகலை காங்கிரஸ் தொழில்நுற்ப கேட்போர் கூடத்தில் 17.12.2017 இடம்பெற்றது
,மஸ்கெலியா,நோர்வூட், கொட்டகலை,,அக்கரபத்தனை, போன்ற பிரதேச சபைகள், ஹட்டன் டிக்கோயா, தலவாக்கலை நகரசபைகள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து சேவல் சின்னத்திலும்
அம்பகமுவ பிரதேச சபை மற்றும் நுவரெலியா மா நகரசபை தனித்து சேவல் சின்னத்திலும் போட்டியிடவுள்ளனர்
மேலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து வெற்றிலை சின்னத்தில் கொத்மலை,அங்குராகெத்த,வலப்பனை போன்ற பிரதேச சபைகளில் போட்டியிடவுள்ளது.
தலவாக்கலை லிந்துலை நரசபை மற்றும் நுவரெலிய மாநகரசபைக்கான வேற்பு மனுக்கள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏனைய சபைகளுக்கான
வேற்பு மனுவில் வேட்பாளர்கள் கையொப்பமிடும் நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்துசிவலிங்கம் உட்பட இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.



