மு.இராமச்சந்திரன்-
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மில்டன் தோட்டத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய வைத்திருந்த ஒருத்தொகை மதுபான போத்தல்களுடன் ஒருவரை தலவாக்கலை அதிரடிபடையினர் கைது செய்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய 16.12.2017 இரவு மேற்படி சுற்றிளைப்பு இடம்பெற்றுள்ளது.
அனுமதிபத்திரமின்றி சட்ட விரோதமாக மதுபான போத்தல் மற்றும் பியர் டின்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை லிந்துலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து நுவரெலிய மாவட்ட நீதிமறில் ஆஜர்படுத்த உள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்னர்.
