சவுதியில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் நகைக்கடைகள் மீது நடவடிக்கை!

சவுதி அரேபியாவில் உள்ள நகைக்கடைகளில் 100% சவுதி குடிமகன்கள் மட்டுமே வேலை பார்க்க வேண்டும் என்ற சட்டம் இம்மாதம் டிசம்பர் 3 ஆம் தேதி முதல் கடுமையாக கண்காணிக்கப்பட உள்ளது. மீறி வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் தங்களுடைய ஒவ்வொரு வெளிநாட்டு ஊழியர்களுக்காகவும் தலா 20,000 ரியால்களை அபராதமாக செலுத்த நேரிடும் என தொழிலாளர் மற்றும் சமூகநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சவுதி முழுவதும் சுமார் 6,000 நகைக்கடைகள் உள்ளன. இவற்றில் சுமார் 25,000 பேர் வேலைவாய்ப்புக்களை பெற்றுள்ளனர். எனினும் கடந்த 16 வருடங்களில் சுமார் 50 சதவிகித சவுதியர்களே இத்துறையில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர், முழுமையாக வேலைவாய்ப்பை வழங்க முடியவில்லை என்ற குறையை தீர்ப்பதற்காகவே தற்போது அதிரடி நகர்த்தல்கள் செய்யப்படுகின்றன.

சவுதி செயல்படும் பல நகைக்கடைகளை நடத்துவது வெளிநாட்டு முதலாளிகளே. ஆவணங்களில் மட்டுமே சவுதிகாரர்கள் முதலாளிகளாக இருப்பார்கள். ஒரு சில கடைகளில் சவுதியரும் வெளிநாட்டினரும் பங்குதாரர்களாக இருப்பார்கள். இந்நிலையில் இந்த சட்டத்தால் சவுதியில் நகை வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சவுதி அரேபியர்களையும் வெளிநாட்டினரையும் ஒரளவு கலந்து வேலைக்கு வைத்துள்ள நிறுவனங்கள் சவுதியர்களுக்கு குறைந்த ஊதியத்தை வழங்கியும், அதிக நேரம் வேலை வாங்கியும், அவர்களை நகைக்கடை தொழிலை கற்றுக் கொள்ளவிடாமல் அந்நியப்படுத்தியே வைத்திருப்பதாகவும் அமைச்சகம் புகார் தெரிவித்துள்ளது.

Source: Saudi Gazette

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -