மு.இராமச்சந்திரன்-
அட்டன் நகரில் வர்த்தக நிலையமொன்றிகருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 லட்சம் ரூபா பெருமதியான மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவரை சீ சீ டி வி காட்சியின் உதவியுடன் கைது செய்யும் நடவடிக்கையில் அட்டன் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்
அட்டன் டன்பார் நகர பகுதியிலே 11.11.2017 இரவு 11 மணியளவில் இத் திருட்டுசம்பவம் இடம்பெற்றறுள்ளது
குறித்த வர்த்த நிலையத்தில் வேலை செய்யும் இளைஞன் ஒருவர் தனது மோட்டார் சைக்கிலை நிறுத்தி வைத்திருந்த போதே இனம் தெரியாதோரால் களவாடப்பட்டுள்ளது
மோட்டார் சைக்கிள் உரிமையாளரினால் 12.11.2017 அட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டதையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சீ சீ டி வி கமராவை பொலிஸார் பரிசோதித்தனர்
மேற்படி ரிசோணையின் போது மோட்டார் சைக்கிளை களவாடிச்செல்வது பதிவாவியுள்ளது இந் காட்சியை வைத்து சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையில் அட்டன் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

