மொஹம்மட் சப்றாஸ்-
ஏறாவூர் ஜாமியத்துல் ஹைரிய்யா அறபிக்கல்லூரிக்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களினால் போட்டோ பிரதி இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு (11.11) இன்று காலை கல்லூரி நிருவாகத்தலைவர் எஸ். அப்துல் ஹமீட் தலைமையில் நடைபெற்றது.
இன்று நடைபெற்ற இந் நிகழ்வில் கல்லூரி நிருவாகத்தினார் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் பாரளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களினால் போட்டோ பிரதி இயந்திரம்; கையளிக்கப்பட்டது.
அதேவேளை இதுவரையில் இக்கல்லூரியில் இருந்து 47 ஹாபிழாக்கல் குர்ஆன் மனனம் செய்து பட்டம்பெற்று வெளியேறியுள்ள நிலையில் இன்றைய தினம் டுபாய் நாட்டில் நடைபெறும் சர்வதேச ஹிப்ழு போட்டியில் இக்கல்லூரி ஹாபிழா ஒருவர் பங்குபெற்றுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.