நிவாரணம் வழங்க சென்ற மாகாணசபை உறுப்பினரை தடுத்த தோட்டத்தலைவியின் அராஜகம்-பொலிசில் முறைப்பாடு

மு.இராமச்சந்திரன்-

ட்டன் செனன் கேஎம் பிரிவில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கச் சென்ற மத்தியமாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரனைத் தாக்க முற்பட்ட இ.தொ.கா. வின் தோட்டத்தலைவி மற்றும் தலைவருக்கெதிராக மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் அட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

இந்தச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது :
கடந்த16 ஆம் திகதி அட்டன் செனன் கேஎம் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று வீடுகள் முற்றாக சேதத்துக்கு உள்ளாகின. இந்தச்சம்பவம் தொடர்பாக இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரனின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர். 

இதனைத் தொடர்ந்து இவ்விடயம் தொடர்பாக ஸ்ரீதரன் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் கவனத்தக்குக் கொண்டு வந்ததைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பெருந்தோட்ட மனிதவள நிறுவனத்தின் ஊடாக கூரை தகரங்களைப் பெற்றுக்கொடுக்குமாறு அமைச்சர் ஸ்ரீதரனை பணித்துள்ளார்.

 இதன் பின்பு செனன் தோட்ட அதிகாரியின் வேண்டுகோள் கடிதத்துக்கு இணங்க பெருந்தோட்ட மனிதவள நிறுவனத்தின் ஊடாக கூரைதகரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்;பட்டது. இதனை அறிவிப்பதற்காக மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பதற்காக அந்தத் தோட்டத்துக்குச் சென்ற போது இ.தொ.காவின் தோட்டத்தலைவி அவரைத் தடுத்துள்ளதோடு கல்லொன்றினால் தாக்குவதற்கும் முற்பட்டுள்ளார். 

மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கூரைத்தகரங்களோ ஏனைய நிவாரணங்களோ வழங்க கூடாதென்றும் எச்சரித்துள்ளார். இ.தொ.காவின் தோட்டத்தலைவரும் அச்சுறுத்தும் பாணியில் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து மத்திய மாகாணசபை உறுப்பினரும் அவரின் ஆதரவாளர்களும் சம்பவம் இடம் பெற்ற இடத்திலிருந்து வெளியேறினர். பின்பு இந்தச்சம்பவம் தொடர்பில் அட்டன் பொலிஸில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -