வன்முறையால் பாதிக்கப்பட்ட ஜிந்தோட்டை பிரதேசத்திற்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் விஜயம்.




அகமட் எஸ். முகைடீன்-

காலி, ஜிந்தோட்டை பிரதேசத்தில் நேற்று (17) வெள்ளிக்கிழமை இரவு இனவாத சக்திகள் மேற்கொண்ட வன்முறைச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும், மக்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் இன்று (18) சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு அம்மக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டார்.

இந்நேரடி விஜயத்தின்போது பிரதி அமைச்சர் ஹரீஸ் பாதிப்புக்குள்ளான வீடுகள், பள்ளிவாசல், வியாபார நிலையங்கள் போன்றவற்றை பார்வையிட்டதோடு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து உரையாடி அம்மக்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டார்.

மேலும் இதன்போது ஜிந்தோட்டை பள்ளிவாசலில் நடைபெற்ற கூட்டம் ஒன்றிலும் பிரதி அமைச்சர் கலந்துகொண்டு அங்குள்ள பாதுகாப்பு நிலமை தொடர்பில் ஆராய்ந்ததுடன் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சேத விபரங்களையும் கேட்டறிந்தார். இக்கூட்டத்தில் கிராமியக் கைத்தொழில் மற்றும் சுயதொழில் ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் அமீர் அலியும் கலந்துகொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -