தலவாக்கலை பி.கேதீஸ்-
இலங்கையின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் 'அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' எனும் வேலைத்திட்டத்தின் கீழ் 160 லட்சம் ரூபா நிதி ஒதிக்கீட்டின் கீழ் மத்திய மாகாண மாத்தளை எல்கடுவ தமிழ் மகா வித்தியாலயத்தின் இரண்டு மாடி கட்டிடம் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கராயக்க அவர்களின் ஆலோசனைக்கமைய மத்திய மாகாண விவசாய,இந்து கலாச்சார மற்றும் தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் இரத்தோட்ட பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் நந்திமித்திர ஏக்கநாயக்க ,மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சிவஞானம், இப்ராஹிம் மற்றும் கல்வி பணிமனையின் உத்தியோகத்தர்கள், பாடசாலையின் அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள் உட்பட கலந்துக்கொண்டவர்களை இங்கு காணலாம்.


