வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தின் உயர்தர வகுப்புக்கு ஆசிரியர் மேசையொன்றினை Pa Pa Ei நிறுவனம் இன்று அன்பளிப்பு செய்துள்ளது.
குறித்த பாடசாலைக்கு ஆசிரியர் மேசையொன்று தேவைப்பாடாகவுள்ளது எனும் கோரிக்கையை உயர்தர வகுப்புக்கான ஆசிரியர் ஏ.ஜீ. அஸீஸுர் ரஹீம் முன்வைத்தமையால் இந்த உதவி கிடைக்கப் பெற்றுள்ளது.
குறித்த உதவியினைச்செய்த நிறுவனத்துக்கு பாடசாலை நிர்வாகத்தினர் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.
அன்பளிப்பு செய்யப்பட மேசையினை அதிபர் அல்ஹாஜ் எம்.ரீ.எம்.பரீட், பிரதி அதிபர் எம்.ஐ.ஜஃபர்,ஆசிரியர்களான எஸ்.பாரூக், ஏ.ஜீ. அஸீஸுர் ரஹீம் மற்றும் பாடசாலை அபிவிருத்திக்குழுச் செயலாளர் எஸ்.நளீம் ஆகியோர்கள் பொறுப்பேற்பதை படத்தில் காணலாம்.