ஒரு சமூகம் அனாதையாக்கப்பட்ட தினம் இன்றாகும்.....!


விரூட்ஷம்

அரசியல் ஞானியே

உன் வருகையினால்

வரண்டு கிடந்த

எங்கள் வாழ்க்கை

வசந்தமாகியது

துயரத்தைச் சுமந்த

தோள்கள் சுதந்திரமாகியது.


மரமாக வந்து

நிழல் தந்து

மலராக வந்து

மணம் தந்து

கனியாக வந்து

சுவை தந்து

உரையால் எமக்கு

உரம் தந்தாய்.


வீரத்தளபதியே

நீ வீழ்ந்தாலும்

விரூட்ஷமாய் எங்களுக்கு

நீயிருக்கின்றாய்

உனக்கு

விழுதுகளாய் நாமிருக்கின்றோம்

நீ வீழ்ந்து விடாமல்

பாதுகாக்க..


வாளலெடுத்துப் போர் செய்த

வள்ளல் நபி

வழி வந்தவர்கள் நாங்கள்

வீரமிருக்கு எம்மிடம்

விரைந்து செயற்படுவோம்

யாருக்கும் அஞ்சாமல்

ஊருக்காக உழைப்போம்.


உன் உயிர் பிரிந்தாலும்

எங்களில் நீ வாழ்கின்றாய்

உனக்காக நாங்கள்

பிரார்த்திற்கின்றோம்

உன் மறுமை வாழ்வு

சிறப்பதற்காக..



பி.எம்.எம்.ஏ.காதர்-

மறைந்த பெருந்தலைவர்

மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின்

மறைவின் 17 ஆண்டு நிறைவையொட்டி

(16-09-2017)எழுதிய கவிதை இது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -