சவுதியிலிருந்து இலங்கை வந்த பயணியொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மரணம்

வுதியிலிருந்து இலங்கை வந்த பயணியொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உயிரிழந்த சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த நபர் சவுதியிலிருந்து நேற்று அதிகாலை 4.20 மணியளவில் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

குறித்த நபர் சவுதியில் வசிக்கும் 49 வயதுடைய அபுபக்கர் அப்துல் வாஹிட் எனவும் சில மாதங்களுக்கு முன்னர் அவரது தனது மனைவியை இலங்கைக்கு அழைத்துவந்து கண்டியில் விட்டுச்சென்றுள்ளார். மீண்டும் தனது மனைவியை சவுதிக்கு அழைத்துச்செல்ல வந்த போதே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக குறித்த நபருக்கு மரணம் ஏற்பட்டிருக்கலாம் என சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுநாயக்க பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர். (வீரகேசரி)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -