மத்திய வங்கியின் பினைமுறி மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்க முன்னாள் நிதி அமைச்சரும், தற்போதைய வெளிவவிகார அமைச்சருமான ரவி கருணாநாயக்க இன்று காலை 10:30 மணியளவில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜரானார்.
இதன்போது, இருமுறை விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும், தம்மால் சமூகம் தர முடியாமல் போனமைக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் மன்னிப்புகோரிய அமைச்சர் ரவி கருணாநாயக்க, எந்தவொரு கேள்விக்கும் தான் பதில் வழங்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இதன்போது, ஆணைக்குழுவுக்கு உண்மைகளை மாத்திரம் கூறினால் எந்தவொரு பிரச்சினையும் ஏற்படாது என, பினைமுறி மோசடி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி கே.டி.சித்ரசிறி அமைச்சருக்குத் தெரிவித்துள்ளார்.