வலம்புரி கவிதா வட்டத்தின் 40 வது கவியரங்கு : கவிஞர் எழுவில் அமீர் அரங்கு

லம்புரி கவிதா வட்டத்தின் பௌர்ணமி 40வது கவியரங்கு கவிஞர் எருவில் அமீர் அவர்களின் அரங்காக கொழும்பு அல் ஹிக்மாகல்லூரியில் 07.08.2017 திங்கட் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு கவிஞர் எம்.ஏ.எம்.ஆறுமுகம் அவர்களின் தலைமையில்நடைபெறும்.. இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக பாணந்துறை தொட்டவத்த அல்-பஹாரியா கல்லூரியின் அதிபர் கவிஞர் கஸ்ஸாலி அஷ் ஷம்ஸ் அவர்கள் கலந்துக் கொண்டு கவிஞர் எழுவில்லை அமீரை பற்றி உரையாற்றுவார்..

இவ்வரங்கில் கௌரவ அதிதிகளாக வகவத்தின் ஆரம்ப கால உறுப்பினரும் அமெரிக்கா டெம்பல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கலாநிதி இம்தியாஸ் ரஸாக் (நிதானிதாசன்) அவர்களும், துபாய் சங்கமம் தொலைக்காட்சி நிலையத்தின் நிர்வாக இயக்குனரும், வகவத்தின் ஆரம்ப கால உறுப்பினருமான கலையன்பன் ரபீக் அவர்களும் கலந்து கொள்வார்கள்.

மேலும் இவ்வரங்கில் பிலிப்பைன்ஸ் நாட்டில் டாக்டர் பட்டம் பெற்ற வகவ ஸ்தாபக உறுப்பினர் எஸ்.ஐ.நாகூர்களி அவர்களின் புதல்வி வலம்புரி கவிதாயினி ருஷைக்கா நாகூர் கனி கௌரவிக்கப்படுவார். .

இவ்வரங்கில் கவிதை வாசிக்க விரும்புவோர் தலைவர் நஜ்முல் ஹுசைன் 0714929642 கவிஞர் ஈழகணேஷ் 0717563646 செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் 0777388149 ஆகியோருடன் தொடர்புக் கொள்ளலாம்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -