ஏறாவூர் மிச்நகர் பரகா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் ஒரு மில்லியன் ரூபா நிதி உதவி



ஆர்.ஹஸன்-
றாவூர், மிச்நகர் பரகா ஜும்ஆ பள்ளிவாசல் புனர்நிர்மாணப் பணிகளுக்காக ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் ஊடாக ஒரு மில்லியன் ரூபா நிதி, அதன் தலைவரும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் வழங்கி வைக்கப்பட்டது. 

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஏறாவூர் மிச்நகர் பரகா ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற மத்ரஸா மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். 

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் மும்தாஸ் மதனி, இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் றுஸ்வின் மொஹமட், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் அஸ்பர் ஜே.பி. மற்றும் முன்னாள் உறுப்பினர் ரவூப் ஏ.மஜீட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

இதன்போது, மிச்நகர் பரகா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய குறித்த பள்ளிவாசலின் புனர்நிர்மாணப் பணிகளுக்காக ஒரு மில்லியன் ரூபா நிதியினை ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் ஊடாக வழங்கி வைத்தமைக் குறிப்பிடத்தக்கது.

ஏறாவூர் மிச்நகர் பரகா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு ஸ்ரீலங்கா
ஹிரா பௌண்டேஷன் ஒரு மில்லியன் ரூபா நிதி உதவி

ஏறாவூர், மிச்நகர் பரகா ஜும்ஆ பள்ளிவாசல் புனர்நிர்மாணப் பணிகளுக்காக ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் ஊடாக ஒரு மில்லியன் ரூபா நிதி, அதன் தலைவரும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் வழங்கி வைக்கப்பட்டது. 

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஏறாவூர் மிச்நகர் பரகா ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற மத்ரஸா மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். 

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் மும்தாஸ் மதனி, இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் றுஸ்வின் மொஹமட், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் அஸ்பர் ஜே.பி. மற்றும் முன்னாள் உறுப்பினர் ரவூப் ஏ.மஜீட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

இதன்போது, மிச்நகர் பரகா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய குறித்த பள்ளிவாசலின் புனர்நிர்மாணப் பணிகளுக்காக ஒரு மில்லியன் ரூபா நிதியினை ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் ஊடாக வழங்கி வைத்தமைக் குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -