அமைச்சர் ரிசாத் பதியுதீனை லஞ்ச ஊழல் திணைக்களம் விசாரிக்காதது ஏன்..?

மைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களின் ஊழல்கள் தொடர்பான விசாரணையை மேற்கொள்ளுமாறு லஞ்ச ஊழல் திணைக்களத்திற்கு கடந்த 06.03.2015 ஆம் திகதி என்னால் மனு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால்  தற்போது இரண்டு வருடங்களைக் கடந்த நிலையிலும் அமைச்சர் ரிசாத் பதியுதீனை லஞ்ச ஊழல் திணைக்களம் விசாரணை செய்ததாக எந்தத் தகவலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை.

ஆனால்இ அமைச்சர் தொடர்பாக மேலும் பல புதிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அத்தகவல்களையும் அண்மையில் லஞ்ச ஊழல் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்க உள்ளேன் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்த உள்ளேன்.

எனவே இப்புதிய ஊழல்கள் மற்றும் பழைய ஊழல்கள் என்பவற்றை உடனடியாக விசாரிக்குமாறு லஞ்ச ஊழல் திணைக்களத்திடம் வேண்டிக் கொள்கிறேன்.

இதன் மூலம் இந்நாட்டில் ஜனநாயகம்இ நல்லாட்சி என்பவற்றை மலரச் செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் உரியவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

ஆனால்இ இவ்வமைச்சர் அரசில் அமைச்சராக இருக்கின்ற காரணத்தால்இ விசாரணைகள் இடம்பெறவில்லையா என்கிற சந்தேகம் எனக்கு நிலவுகிறது. ஆகவேஇ இவரை தற்காலிகமாக அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இந்நாட்டுப் பிரஜை என்ற முறையில் கோரிக்கையை முன்வைக்கிறேன்.

புதிய ஊழல்கள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கும் திகதி மற்றும் நேரம் பின்னர் முன்கூட்டியே அறிவிக்கப்படும்.

இப்படிக்கு
ராஸிக் முஹம்மத் குவைதிர்கான்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -