மு.இராமச்சந்திரன்-
ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்பவர்களை ஏற்றிச்சென்ற பஸ் லொறியில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் சாஞ்சிமலை பிரதான வீதியில் பட்டல்கல சந்திக்கருகிலே 28.07.2017 காலை 7.45 மணியளவில் விபத்து சம்பவித்துள்ளது.
ஹட்டனிலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றுக்கு போடைஸ் பகுதியிலிருந்து வேலை செய்பவர்களை ஏற்றிவந்த சிட்டி ரைடர் பஸ் எதிரே வந்த லொறி மோதுண்டே விபத்துக்குள்ளானதாகவும் பதையில் காணப்பட்ட வழுக்கல் நிலையினால் தடை இயங்காமல் லொறியில் மோதுண்டுள்ளதாக தெரிவித்தனர். விபத்தில் பஸ்ஸில் பயணித்த போடைஸ் பகுதியை சேர்ந்த இரண்டு பெண்கள் காயமுற்று டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்தாகவும் பஸ் மற்றும் லொறி சேதமாகியுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணையை முன்னெடுப்பதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.