மோட்டர் சைக்கிள் விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழப்பு..!

க.கிஷாந்தன்-
பொரலந்த கெப்பெட்டிபொல பிரதான வீதியில் பொரலந்த நகரத்தை அண்மித்த பகுதியில் 09.07.2017 அன்று இரவு 11 மணியளவில் இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். றாகம இராணுவ முகாமில் கடமையாற்றிய இளைஞனே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர் வெலிமடை வங்கியகும்புர பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பொரலந்த பிரதேச வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டள்ளது. இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை போகஹகும்புர மற்றும் வெலிமடை பொலிஸார் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -