லொறி விபத்து - இருவர் காயம்

க.கிஷாந்தன்-
ட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் குடாஓயா பகுதியில் லொறி ஒன்று மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் இருவர் படுங்காயம்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து 28.07.2017 அன்று மாலை 3.45 மணியளவில் அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் குடாஓயா பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கொட்டகலையில் தொழிற்சாலை ஒன்றுக்கு விறகுகளை இறக்கிவிட்டு மீண்டும் கிதுல்கல பகுதிக்கு செல்லும் வழியில் குறித்த லொறி குடாஓயா பகுதியில் மண்மேடு ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த லொறியில் சாரதி மற்றும் உதவியாளர் படுங்காயம்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மழை காரணமாக வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்பட்டதனால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து சம்பவித்துள்ளது. இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -