ஆமை வைத்திருந்தவருக்கு இருபதாயிரம் ரூபா தண்டம் - திருமலையில் சம்பவம்

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை- நிலாவெளி பிரபல ஹோட்டலொன்றுக்குள் 09 ஆமைகளை வைத்திருந்த நபருக்கு 20000/= ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறு இன்று (11) திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்க உத்தரவிட்டார்.  இவ்வாறு தண்டம் செலுத்தியவர் கும்புறுபிட்டியைச்சேர்ந்த ரஞ்சித் கிறிஸ்தோப் சேனாநாயக்க (51வயது) எனவும் தெரியவருகின்றது.

குறித்த நபர் 09 ஆமைகளை தம் வசம் வைத்திருந்த போது வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து சோதனை செய்த போது 09 ஆமைகளுடன் இவர் கைது செய்யப்பட்டதாகவும் நீதிமன்றில் தெரிவித்தனர்.

சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து தண்டம் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -