அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை- நிலாவெளி பிரபல ஹோட்டலொன்றுக்குள் 09 ஆமைகளை வைத்திருந்த நபருக்கு 20000/= ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறு இன்று (11) திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்க உத்தரவிட்டார். இவ்வாறு தண்டம் செலுத்தியவர் கும்புறுபிட்டியைச்சேர்ந்த ரஞ்சித் கிறிஸ்தோப் சேனாநாயக்க (51வயது) எனவும் தெரியவருகின்றது.
குறித்த நபர் 09 ஆமைகளை தம் வசம் வைத்திருந்த போது வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து சோதனை செய்த போது 09 ஆமைகளுடன் இவர் கைது செய்யப்பட்டதாகவும் நீதிமன்றில் தெரிவித்தனர்.
சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து தண்டம் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.