பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை..!

த்­திய வங்­கியில் இடம்­பெற்­றுள்ள பிணை­முறி மோச­டி­யி­லி­ருந்து அர­சாங்கம் தப்­பித்­துக்­கொள்­வ­தற்கு அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவை மட்டும் பத­வி­யிலி­ருந்து விலக்க முற்­ப­டலாம். எனினும் அதற்கு மாத்­திரம் நாம்இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை. எனவே பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க மற்றும் அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­ ஆகிய இருவருக்கும் எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணையை கொண்­டு­வ­ரு­வ­தற்கு கூட்டு எதிர்க்­கட்சி எதிர்­பார்த்­துள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சி.பி.ரத்­நா­யக்க தெரி­வித்தார்.

கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­ செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று பகல் பாரா­ளு­மன்ற கட்­டடத் தொகு­தியில்நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

நாட்டில் சட்­டத்­தையும் ஒழுங்­கையும் பாதுகாக்க வேண்­டிய பொறுப்பு பொலி­ஸா­ருக்கு உள்­ளது.எனினும் பொலிஸ்மா அதிபர் தற்­போது சட்­டத்தை அர­சாங்­கத்தின் தேவைக்கு அமை­வாக மாற்­று­கிறார்.வடக்கில் ஒரு வித­மா­கவும்தெற்கில் மற்­று­மொரு வித­மா­கவும் சட்டம் அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.

மேலும் அர­சாங்கம் வகை­தொ­கை­யின்றி தேசிய வளங்­கைள வெளி­நா­டு­க­ளுக்கு தாரை வார்க்­கி­றது. அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா­விற்கு விற்­பனை செய்­வ­தற்­கான ஒப்­பந்தம் எதிர்­வரும் சனிக்­கி­ழமை கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ளது. இது மிகவும் பார­தூ­ர­மா­ன­தாகும். ஏனெனில் அம்­பாந்­தோட்டை துறை­மு­க­மா­னது நாட்டின்பொரு­ளா­தா­ரத்தில் மிக முக்­கிய இடம் வகிக்­க­வுள்­ளது.

துறை­மு­கங்­க­ளுக்குப் பொறுப்­பான அமைச்­ச­ராக அர்­ஜுன ரண­துங்க பதவி வகித்­த­போது அவர் அவ்­வொப்­பந்­தத்­திற்கு உடன்­ப­ட­வில்லை.எனவே அவரை அவ்­வ­மைச்­சி­லி­ருந்து நீக்­கி­விட்டு தற்­போது தேசியப் பட்­டியல் மூலம்தெரி­வான பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரூ­டாக குறித்த உடன்­ப­டிக்­கையை செய்­து­கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளனர்.

அவ்­வு­டன்­ப­டிக்­கைக்கு கடந்த செவ்­வாய்க்­கி­ழமை அமைச்­ச­ரை­வயின் அனு­மதி பெறப்­பட்­ட­துடன் வெள்­ளிக்­கி­ழமை (இன்று) பாரா­ளு­மன்றில் விவாதம் நடத்தி எதிர்­வரும் சனிக்­கி­ழமை கைச்­சாத்­தி­டு­வ­தற்கும் நட­வ­டிக்கைஎடுத்­துள்­ளனர். ஏன் இவ்­வாறு அவ­ச­ர­மாக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்? ஆகவே அவ்­வு­டன்­ப­டிக்­கைக்கு எதி­ராக நாட்­டு­மக்கள் அனை­வரும் ஒன்­று­தி­ரள வேண்டும். 

மேலும் மத்­திய வங்கி பிணை­முறி விவ­கா­ரத்தில் இடம்­பெற்­றுள்ள மோச­டிக்­காக அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க மாத்­தி­ர­மல்­லாது நல்­லாட்சி அர­சாங்­கமே பொறுப்­புக்­கூற வேண்­டி­யுள்­ளது. எனவே அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவை மட்டும் பதி­வி­யி­ருந்து விலக்கி அர­சாங்கம் குறித்த குற்றச்சாட்டிலிருந்து விலகுவதற்கு எத்தணிக்கலாம். எனினும் அதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை.

ஆகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய இருவருக்கும் எதிராகநம்பிக்கையில்லாப் பிரேரனை கொண்டுவருவதற்கு கூட்டு எதிர்கட்சி எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும்தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -