ஒடிசாவின் கஞ்சம் மாவட்டம் சரோடா கிராமத்தைச் சேர்ந்த பார்பாதி நாயக் என்ற பெண் ஆஸ்துமாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக ஆரம்ப சுகதார நிலையம் ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி கடந்த 4-ம் தேதி இறந்தார். தாயுடன் வந்திருந்த அவரது மகன் சீத்தாராம் நாயக், இறந்த தனது தாயின் சடலத்தை வீட்டிற்கு கொண்டு செல்ல மருத்துவமனை ஆம்புலன்ஸ் தருமாறு கேட்டார்.
ஆனால் இரண்டு மணி நேரம் அவரை அலைகழிக்க வைத்த மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தர மறுத்தது.
வேறு வழியின்றி தனது தாயின் சடலத்தை துணியில் மூட்டை போன்று கட்டி ஒரு மூங்கி கம்பில் கோர்த்து கட்டி உடன் வந்த ஒருவரின் உதவியுடன் தாயின் சடலத்தை கொண்டு சென்றார்.
வேறு வழியின்றி தனது தாயின் சடலத்தை துணியில் மூட்டை போன்று கட்டி ஒரு மூங்கி கம்பில் கோர்த்து கட்டி உடன் வந்த ஒருவரின் உதவியுடன் தாயின் சடலத்தை கொண்டு சென்றார்.