ஓட்டமாடிவ நிருபர் அ.ச.முகம்மது சதீக்-
டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட நிகழ்ச்சி திட்டம் என்ற தலைப்பின் கீழ் கல்வி அமைச்சினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. அதில் வெள்ளிக்கிழமை காலை கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளாது டெங்கு ஒழிப்புக்காக பாடசாலை சூழலை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று தினங்களுக்குள் சகல பாடசாலைகளினதும் மாணவர்கள் பெற்றோர்கள் ஆசியரியர்கள் பழைய மாணவர்கள் மற்றும் அயலவர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தை இணைத்துக்கொண்டு பாடசாலை மற்றும் அயற்சூழலை தூய்மைப்படுத்துவற்காக நடவடிக்கை எடுக்குமாறும் பணிக்கப்ட்டுள்ளது.
இதற்கமைவாக மட் மம தியவாட்டவான் அறபா வித்தியாலயத்தில் டெங்கு நோயை கட்டப்படுத்துவதற்கான சுற்றுப்புறச்சூழலை கட்டுப்படுத்துவதற்கான சிரமதானப் பணிகள் இன்று நடைபெற்றது.