ஊடகப்பிரிவு-
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் 20 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட மருந்தக கலஞ்சியசாலை, ஆய்வுகூட கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (13) வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் பிரதம அதிதியாகவும், கெளரவ அத்தியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கலந்கொண்ட இந்நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் இந்திரக்குமார் பிரசன்ன, கருனாகரன், நடராஜ ஆகியோருடன் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச்செயலாளர் சியாகுல் ஹக், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இதன் போது கலந்துகொண்டனர்.
மேலும், வைத்தியசாலைக்கு தேவையான பொருட்களும், வைத்தியசாலை கட்டிடத்திற்கான லிப்ட் (மின் தூக்கியும்) கையளிக்கப்பட்டது.