நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
கொட்டகலையில் தண்டவாளத்திலிருந்து தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றுவதற்கு கொழும்பிலிருந்து வந்த விசேட ரயில் நாவலப்பிட்டியில் தடம் புரண்டுள்ளது. நாவலப்பிட்டி ரயில் நிலையத்திற்கருகே 13.07.2017 மாலை 5 மணியளவில் தடம்புரண்டுள்ளது.
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்ற இரவு நேர தபால் சேவை ரயில் கொட்டகலை 60 அடி பாலத்தருகில் 13 .07.2017 அதிகாலை 2 மணியளவில் தண்டவாளத்திலிருந்து தடம்புரண்ட நிலையில் மலையக ரயில் போக்குவரத்து பாதிப்படைந்ததுடன் ரயில் பெட்டிகளை அகற்றுவதற்காக கொழும்பிலிருந்து விசேட ரயிலில் அதிகாரிகள் வருத்தந்தனர் .
இவ்வாறு வருகைத்தந்த ரயிலே நாவலப்பிட்டில் தண்டவாளத்திலிருந்து தடம்புரண்டுள்ளது. தடம்புண்ட ரயிலை சீமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.