பி.எம்.எம்.ஏ.காதர்-
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் ஏற்பாடு செய்த வருடாந்த இப்தார் நிகழ்வு இன்று(21-06-2017)சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் மகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.அப்துல் நிஸாம் தலைமையில் நடைபெற்றது.இதில் விஷேட விருந்தினர்களாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்,முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசனலி ஆகியோருடன் கல்வித்திணைக்கள அதிகாரிகள்,வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளீட்ட பலர் கலந்து கொண்டனர்.இங்கு கலாநிதி அஷ்செய்க் எம்.எல்.முபாறக் மதனி விஷேட உரையாற்றினார்.