கட்டார் நாட்டில் அவசர நிலை ஏற்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கட்டாரில் உள்ள இலங்கையர் அமைப்புகளுக்கு அந் நாட்டுக்கான இலங்கை தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது.
எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில் கட்டாரில் உள்ள 22 இலங்கையர் அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக கட்டாருக்கான இலங்கை தூதுவர் லியனகே தெரிவித்துள்ளார்.
மேலும், கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு உணவு மற்றும் தொழில் தொடர்பில் பிரச்சினை எதுவும் இல்லை எனவும் லியனகே குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சினதும் ஆலோசனைக்கு அமையவே தான் அனைத்து தீர்மானங்களையும் மேற்கொள்வதாக ஊடகம் ஒன்றுக்கு லியனகே தெரிவித்துள்ளார்.