ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
மருத்துவத்துக்கும் தொழில்நுட்பத்துக்குமான தெற்காசிய நிறுவகத்துக்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் 87 பேர் படுகாயமடைந்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாக மாணவர்கள் வெள்ளிக்கிழமை (23.06.2017) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
'கல்வி உரிமை பெறப் போராட்டம் நடாத்திய மாணவர்களை நாகரீகமற்ற முறையில் தாக்கியதை வன்மையாகக் கண்டிக்கின்றோம' 'சட்டமுறை சாராத மாலபே பட்டத்தைத் தடை செய்' 'பிக்கு நடத்தாளரை உடனே விடுதலை'
எனும் பதாதைகளைத் தாங்கியவாறு மாணவர்கள் பல்கலைக் கழக நுழைவாயிலுக்கு முன்னால் சுமார் 30 நிமிடங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.