சுகாதார அமைச்சின் புதிய ஊடக பணிப்பாளராக பிரசன்ன அதிகாரி நியமனம்..!

எம்.எம்.ஜபீர்-
சுகாதார, போசணை மற்றும் தேசிய வைத்திய அமைச்சின் ஊடகப் பணிப்பாளராக பிரசன்ன அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 1ம் திகதி முதல் தனது பதவியை உத்தியோக பூர்மாக பொறுப்பேற்றார்.

மாநகர மற்றும் மேல்மாகாண அமைச்சின் ஊடகப்பணிப்பாளராக கடைமையாற்றிய இவர் லக்பிம பத்திரிகையின் ஊடகவியலாளராகவும் கடமையாற்றியமை விசேட அம்சமாகும். இவர் தகவல் மற்றும் ஊடக அமைச்சு,விவசாய அமைச்சு,சுற்றுலா அமைச்சு,உள்ளூராட்சி மற்றும் மாகாண அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு ஆகியவற்றில் ஊடகச் செயலாளராகவும் கடமையாற்றினார்.

ஸ்ரீஜயவர்தன புர பல்கலைக்கழகத்தின் எழுத்தாற்றல் மற்றும் தொழிநுட்ப டிப்ளோமாதாரியும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊடகவியல் டிப்ளோமா தாரியுமான இவர் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பட்டதாரியுமாவர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -