இந்திய முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் முதலீட்டு சூழல் ஏற்பட்டுள்ளது

லங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பொருளாதார சீர்திருத்தங்கள் இந்திய முதலீட்டாளர்களுக்கு ஆக்கபூர்வமான முதலீட்டு சூழலை ஏற்படுத்தியுள்ளது!

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பொருளாதார சீர்திருத்தங்கள் இந்திய முதலீட்டாளர்களை ஆர்வப்;படுத்தியுள்ளதுடன் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமாக திகழும்எல்.என்.ஜி எரிவாயு நிறுவனம், இலங்கை சந்தையில் முற்றிலும் மாறுபட்ட புதிய பசுமைஎரிவாயுவினை விநியோகிப்பதற்கு முன்வந்துள்ளது என இந்திய தொழில்துறையின் கூட்டமைப்பின் வர்த்தக பிரதிநிதிக் குழுத் தலைவர் ரமேஷ் குமார் முத்தா தெரிவித்தார்.

கடந்த வாரம் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடனானஇடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே ரமேஷ் குமார் முத்தா இதனை தெரிவித்தார்.
இவ்விசேட சந்திப்பின் போது ரமேஷ் குமார் முத்தா தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்:

இலங்கை மற்றும் இந்திய பொருளாதாரங்களில் சீர்திருத்தங்கள் நடைபெற்று வருகின்றன. இருநாட்டுபொருளாதாரங்களும் வளர்ச்சிப் பாதையில் உள்ளன. இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ளபொருளாதார சீர்திருத்தங்கள் இந்திய முதலீட்டாளர்களை ஆர்வப்படுத்தியுள்ளதுடன் ஆக்கபூர்வமானமுதலீட்டு சூழலை ஏற்படுத்தியுள்ளது. எமது பிரதிநிதிகளின் சிறப்பு உறுப்பினர்கள் இலங்கையில் எரிசக்தி, எல்.என்.ஜி எரிவாயு, ஏற்றுமதி இணைப்புகள் மற்றும் நீர் வழங்கல் ஆகியவற்றில்பங்கெடுத்துக் கொள்ள ஆர்வமாக உள்ளனர். இந்தத் துறைகளில் இலங்கையில் முதலீடு செய்வதற்கும்நாம் திட்டமிட்டுள்ளோம். உதாரணமாக, இந்தியாவின் மிகப்பெரிய இறக்குமதியாளரான பெட்ரோனாட்எல்.என்.ஜி எரிவாயு லிமிடெட் இலங்கையில் ஒரு பெரிய அளவிலான திட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளது.

இந்திய பன்னாட்டு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் நடுத்தர சிறியகைத்தொழில்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டஉறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்திய தொழில்துறை கூட்டமைப்பானது வர்த்தகம் தலைமையிலான,இலாப நோக்கமற்ற கூட்டமைப்பாகும். 

இது ஒரு முன்னணி கொள்கை செல்வாக்குக்கு உள்ளாகியுள்ளசெயல்மிகு பயனர். முக்கியமாக இந்திய தொழில்துறை கூட்டமைப்பானது இந்திய நடுத்தர சிறியகைத்தொழில்துறை, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை ஆகியவற்றிற்கு ஒரு குறிப்புபுள்ளியாக திகழுகிறது. இவை 2 லட்சம் உறுப்பு நிறுவனங்களை கொண்டுள்ளது. இந்தியதொழில்துறை கூட்டமைப்பானது சீனா, அவுஸ்திரேலியா, பஹ்ரைன், எகிப்து, பிரான்ஸ், ஜெர்மனி,சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய ஒன்பது நாடுகளில் வெளிநாட்டு அலுவலகங்கள்கொண்டுள்ளதுடன் 106 நாடுகளில் 320 நிறுவனங்களுடன் நிறுவன கூட்டுறவை கொண்டுள்ளது.

அத்துடன் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு இந்தியாவின் மிகப் பெரிய தொழில்துறைசம்மேளனமாகவும் திகழுகின்றது என்றார் இந்திய தொழில்துறையின் கூட்டமைப்பின் வர்த்தகபிரதிநிதிக் குழுத் தலைவர் ரமேஷ் குமார் முத்தா.

மேற்படி இச்சந்திப்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கருத்து தெரிவிக்கையில்: எங்கள்தொழில்துறைக்குள் இந்திய முதலீட்டாளர்களை நாம் வரவேற்கின்றோம். பெட்ரோனாட் எல்.என்.ஜிநிறுவனம் ஏற்கனவே இலங்கை சந்தையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான திட்டத்தைமுன்வைத்துள்ளமைக்கு எனது பாராட்டுக்கள் உங்கள் முயற்சிகள் உள்ளூர் எரிவாயு சந்தையைவலுப்படுத்த முடியும். நமது கூட்டு அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி நோக்கமானது, உயர்நடுத்தர வருமான மட்டத்தை எட்டுவதற்கும், பொருளாதார சீர்திருத்தங்களுக்கு முக்கிய பங்கைவகிப்பதற்குமாக செயலாற்துகின்றது.

இலங்கைக்கான இந்தியாவின் முதலீடு ஆண்டுதோறும் 50-70 மில்லியன் அமெரிக்க டொலருக்குஇடைப்பட்டதாக காணப்படுகின்றது. இந்திய முதலீட்டாளர்கள் இங்கு குறிப்பிடத்தக்க பங்கைக்கொண்டுள்ளனர். உதாரணமாக 2015 ஆம் ஆண்டு இந்தியா, இலங்கையின் ஐந்தாவது மிகப்பெரியமுதலீட்டாளராக காணப்பட்டது. உங்கள் முதலீடுகள் இரு வழி வர்த்தகத்தை அதிகரிக்கலாம். கடந்தஆண்டு எங்கள் மொத்த இருதரப்பு வர்த்தகமானது 4.3 பில்லியன் அமெரிக்க டொலர் ஆகும்.

இந்தியாவிற்கான எமது முன்னணி ஏற்றுமதிகள் பல்வகைப்பட்ட முயற்சிகளின் பன்முகத்தன்மையைக்காட்டியது. இலங்கையில் இருந்து மசாலா, காகித பெட்டி, கப்பல்கள் மற்றும் படகுகள் முக்கியஏற்றுமதிகளாக காணப்பட்டது. மேலும் முக்கியமாக, இந்தியாவுக்கான நமது ஏற்றுமதிகளில் 60சதவீதத்திற்கும் அதிகமான உற்பத்திகள் இலங்கை-இந்திய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ்உட்பட்டதாகவே காணப்பட்டது. புதிய இந்திய முதலீட்டாளர்கள் எதிர்காலத்தில் இங்கே ஆக்கபூர்வமானஉறுதியான போக்குகளை வலுப்படுத்த முடியும்....
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -