நாடளாவிய ரீதியில் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதினொரு மாவட்டங்களில் வாழும் 2 இலட்சத்து 43 ஆயிரத்து 683 குடும்பங்களை சேர்ந்த எட்டு இலட்சத்து 49 ஆயிரத்து 752 பேர் கடும் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களி லேயே அதிகளவில் வரட்சி நிலவுகின்றது. குறித்த மாகாணங்களில் மாத்திரம் ஒரு இலட்சத்து 86 ஆயிரத்து 180 குடும்பங்களை சேர்ந்த 6 இலட்சத்து 53 ஆயிரத்து 358 பேர் கடுமையான பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.நாட்டில் நிலவும் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளோர்களின் தற்போதைய நிலை குறித்து வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாடளாவிய ரீதியில் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதினொரு மாவட்டங்களில் வாழும் 2 இலட்சத்து 43 ஆயிரத்து 683 குடும்பங்களைச் சேர்ந்த எட்டு இலட்சத்து 49 ஆயிரத்து 752 பேர் கடும் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்களே அதிகளவிலான பாதிப்புக்களை எதிர்நோக்கியிருக்கின்றனர். வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் 34 ஆயிரத்து 49 குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சத்து 23 ஆயிரத்து 433 பேரும், முல்லைத்தீவில் 35670 குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 20 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 23 ஆயிரத்து 206 குடும்பங்களில் வாழும் 80973 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் 24507 குடும்பங்களை சேர்ந்த 85771 பேரும், மன்னார் மாவட்டத்தில் 13499 குடும்பங்களில் வசிக் கும் 47710 பேரும் பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் கிழக்கு மாகாணத்தின் திரு கோணமலை மாவட்டத்தில் 27646 குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சத்து 5 ஆயிரத்து 847 பேரும், அம்பாறையில் 10310 குடும்பங்களை சேர்ந்த 36029, பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 17293 குடும்பங்களில் வாழும் 58 ஆயிரத்தி 575 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களான குருணாகலில் 29377 குடும்பங்களில் வசிக்கும் 97372 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 53159 குடும்பங்களில் வாழும் ஒரு இலட்சத்தி 83 ஆயிரத்து 130 பேரும், அநுராதபுர மாவட்டத்தில் 4344 குடும்பங்களில் 13264 பேரும் குறித்த வரட்சியினால் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வரட்சி காரணமாக குறித்த மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகின்றது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பவுஸர்கள் மூலம் குடிநீர் விநியோக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.பாரிய அளவில் விவாசாய நிலங்கள் அழிவடைந்துள்ளமையினால் பெரும்பாலான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இலட்சக்கணக்கில் மீன்களும் கடலில் இறந்து கரையொதுங்கியிருந்தன. இதனால் வட பகுதி மீனவர்களும் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியிருந்தனர்.
இந்நிலையில் வட பகுதியில் தற்போது தென் மேல் பருவப் பெயர்ச்சி மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறவுள்ளதால் தொடரும் வரட் சியான கால நிலை குறைவடையும் சாத்தி யம் உள்ளது என்றார்.