சுசந்திக்காவின் பதக்கங்களை விளையாட்டு அமைச்சே கொள்வனவு செய்யும் - தயா­சிறி

சர்­வ­தேச விளை­யாட்டுப் போட்­டி­களில் இலங்கை சார்பில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெ­று­ப­வர்­களின் பதக்­கங்கள் நாட்­டிற்குரி­ய­வை­யாகும். அதற்­கேற்­ற ­வ­கையில் புதிய சட்டம் கொண்டு வரப்­பட வேண்டும். அப்­போது பதக்­கங்­களை விற்­பனை செய்­வதை தடுக்க முடியும் என விளை­யாட்டுத்துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார். 

அர­சாங்கம் என்ற வகையில் ஒலிம்பிக் வீராங்­கனை சுசந்­தி­கா­விற்கு தேவை­யான அனைத்­தையும் செய்­துள்­ளது. சுசந்­திகா ஜய­சிங்க ஒலிம்பிக் பதக்­கத்தை ஏலத்தில் விட்டால் விளை­யாட்டுத்துறை அமைச்சு அதனை கொள்­வ­னவு செய்யும் என அவர் குறிப்­பிட்டார். 

அமைச்­ச­ரவை தீர்­மா­னங்களை அறி­விக்கும் ஊடக சந்­திப்பில் நேற்று கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் ,

அர­சாங்கம் என்ற வகையில் சுசந்­தி­கா­வுக்கு செய்ய வேண்­டிய கட­மைகள் அனைத்­தையும் செய்­துள்­ளது. அவரை சர்­வ­தேச போட்­டி­க­ளுக்கு தயார்­ப­டுத்­து­வது முதல் இன்று வரை பல கோடி­ ரூபாவை செல­விட்­டுள்­ளது. சுசந்­திகா ஜய­சிங்க ஒலிம் பிக் பதக்­கத்தை ஏலத்தில் விட்டால் விளை­யாட்டுத் துறை அமைச்சு அதனை கொள்­வ­னவு செய்யும். 

ஆனால் இவ்­வா­றான செயற்­பா­டு­களை தடுப்­ப­தற்­காக புதிய சட்டம் ஒன்றின் தேவை தற்­போது ஏற்­பட்­டுள்­ளது. சர்­வ­தேச விளை­யாட்டுப் போட்­டி­களில் இலங்கை சார்பில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெ­று­ப­வர்­களின் பதக்­கங்கள் நாட்­டிற்கு உரித்தாகும் வகையில் அந்த சட்டம் அமையப்பெற வேண்டும். அதனூடாக பதக்கங்களை விற்பனை செய்வதை தடுக்க முடியும் என்றார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -