லிந்துலையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் காயம்..!

க.கிஷாந்தன்-
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊவாக்கலை தோட்டத்தின் வெள்ளி மலை பிரிவில் 18.06.2017 அன்று இரவு இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த நபர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் வீட்டின் முன் வாசலில் கிடந்த பொதி ஒன்றினை கத்தி ஒன்றினால் தள்ளியபோது பொதியினுள் காணப்பட்ட வெடி பொருள் வெடித்து காயமடைந்துள்ளார்.

இதேவேளை அப்பகுதியில் பன்றி ஒன்றும் வெடிபொருளினால் வெடித்து உயிரிழந்துள்ளது. குறித்த பிரதேசத்திலிருந்த வெடித்து சிதறிய வெடிபொருட்களை லிந்துலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்ததையடுத்து பொலிஸார் இந்த வெடிபொருட்கள் எவ்வாறு கொண்டு வரப்பட்டது என விசாரனைகளை நடத்தி வருகின்றனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -