இப்தார் நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியவர்கள் தான் முஸ்லிம்கள் - பிரதமர்

முஸ்லிம்கள் இப்தார் நடாத்த வைத்திருந்த நிதியை வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி உதவினர் எனவும், இந்த நன்கொடைகள் கிராமப்புறங்களில் பாதிக்கப்பட்ட சிங்கள மக்களுக்கே பெரும்பாலும் கிடைத்ததாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களுக்கு வழங்குமாறு கூறி அந்த நிதியை அவர்கள் தரவில்லையெனவும், முழு இலங்கையர்களுக்கும் வழங்குமாரே கொடுத்தார்கள் எனவும் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார். இதனை விசேடமாக சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது எனவும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று மாலை அலரி மாளிகையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு கூறினார்.

நாட்டில் சட்டத்தின் முன் சகலரும் சமன். இதில் சாதாரண மக்கள், மதப்பெரியார்கள், என்று வித்தியாசம் இல்லை. யாராகினும் சட்டத்திற்கு புறம்பாக செயற்பட முடியாது எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -