இவர்கள் அன்றைய தினம் பணியில் இருந்தபோது சீருடை அணியாததால் இந்த தண்டனை வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. காவல் துறை சார்பில் அதிகாரிகள் அனைவருக்கும் போலீஸ் சீருடை வழங்கப்படுகிறது, மேலும் பணியின் போது சீருடை அணிவது கட்டாயம் ஆகும்.
ஒழுங்கு நடவடிக்கையாக சீருடை அணியாத நான்கு போலீசாரும் இரண்டு நிமிடங்களுக்கு மண்டியிட உத்தரவிடப்பட்டதாக இன்ஸ்பெக்டர் அசோக் குமார் சேதி தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து முறையான விளக்கமளிக்க போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக காவலர்கள் பிரிவு தலைவர் பி.கே. பெஹரா தெரிவித்துள்ளார்.
ஒழுங்கு நடவடிக்கையாக சீருடை அணியாத நான்கு போலீசாரும் இரண்டு நிமிடங்களுக்கு மண்டியிட உத்தரவிடப்பட்டதாக இன்ஸ்பெக்டர் அசோக் குமார் சேதி தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து முறையான விளக்கமளிக்க போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக காவலர்கள் பிரிவு தலைவர் பி.கே. பெஹரா தெரிவித்துள்ளார்.
இந்த மனித உரிமை மீறல் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கும் விதமாகவும், இதேபோன்ற சம்பவம் மீண்டும் ஏற்படாமல் இருக்க போலீஸ் ஆய்வாளர் அசோக் குமார் சேதியை பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என ஒடிசா மாநில காவலாளிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.(தினகரன்)