சம்பூரில் நான்கு பேர் 28 டைனமைட்டுடன் கைது..!

ஏ.எம்.கீத் திருகோணமலை-
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தாயிப்நகர் நல்லுர் கடல் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் டைனமைட் வெடிபொருட்கள் மூலம் மீன் பிடிக்கமுற்பட்ட நான்கு பேரை இன்று சம்பூர் பொலிஸார் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து படகு அதற்குறிய இயந்திரம் டைனமைட் குச்சிகள்-28, டைனமைட் நூல் 7அடி, டெட்டனேட்டர்-9, சிலிண்டர்கள்-4 மற்றும் சவல் போன்ற பொருட்களையும் சம்பூர் பொலிஸார் கைப்பற்றினர். இவர்களில் கூனித்தீவு பிரதேசத்தில் ஒருவரும், மூதூர் பிரதேசத்தில் ஒருவரும், தாயிப்நகரில் இருவருமாக 4 பேரையும் இன்று மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுக்கின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -