''ரிசாத் பதியுதீன் போன்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் எனக்கெதிராகப் புகார் தெரிவித்ததன் காரணமாகவே போலீசார் என்னைக் கைது செய்ய முயற்சி செய்தார்கள். ஆனாலும் என்னை எதுவும் செய்துவிட முடியாது. ரிசாத் பதியுதீன், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் அசாத் சாலி ஆகியோரைக் கட்டுப்படுத்தாது சட்டம் என்னையும் கட்டுப்படுத்தாது!''
இன்று கண்டி தலதா மாளிகையின் முன்னால் வைத்து ஊடகங்களிடம் பேசிய ஞானசார இவ்வாறு தெரிவித்துள்ளார்.
''விக்கினேஸ்வரன் நாட்டைப் பிரிக்கப் பார்க்கிறார். ரிசாத் பதியுதீன் காட்டை அழிக்கிறார். ஆசாத் சாலி ஜிகாத் செய்ய அழைக்கிறார். இவர்களையெல்லாம் ஒன்றும் செய்யாத சட்டத்தால் என்னையும் எதுவும் செய்து விட முடியாது!'' என்றும் ஞானசார கூறியுள்ளார்.