ஜீஎஸ்பி + கிடைத்தது இதற்காகத்தானாம்

[Political Gossip]
நெடுங்காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஜீஎஸ்பி + வரிச் சலுகை இந்த மாதம் 19ஆம் திகதி இலங்கைக்குக்கிடைத்துள்ளது.ஐரோப்பிய ஒன்றியம் விதித்த 27 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இந்தச் சலுகை வழங்கப்பட்டதுஎன்று சொல்லப்படுகின்றது.ஆனால்,அரசியல் காரணங்களின் பின்னணியில்தான் இது வழங்கப்பட்டது என்பதுதான்உண்மை.

சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கடற்படையின் புலனாய்வு அதிகாரி ஒருவருக்கு பிணையைப்பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அந்த அதிகாரிக்கு நெருக்கமானவர்கள் சிலர் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த ஐக்கியதேசிய கட்சியின் ஒரு முக்கிய அமைச்சரைச் சந்தித்து உரையாடினர்.

அந்த அமைச்சரோ பிணை சாத்தியமற்றது என்று கூறினார்.அவர் அதற்குக் கூறிய காரணம் அவர்களைஅதிர்ச்சிக்குள்ளாக்கியதாம்.எமக்கு இப்போது ஜீஎஸ்பி + வரிச் சலுகை கிடைத்திருப்பதே அந்த அதிகாரியை உள்ளேபோட்டதால்தான் என்று அமைச்சர் கூறினாராம். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பிரதிநிதிகள் ''அப்போ எங்களைக் கா [கூ] ட்டிக் கொத்துத்தான் இந்தச்சலுகையைப் பெற்றீர்கள்போல''என்று ஆத்திரம் பொங்க நாகரீகமான வசனங்களால் கூறிவிட்டுவெளியேறினார்களாம்.அமைச்சரோ எதுவும் பேசாமல் சிறிது நேரம் மௌனமாகவே இருந்தாராம்.
எம்.ஐ.முபாறக் -சிரேஷ்ட ஊடகவியலாளர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -