வீதி விபத்தில் இரு மாடுகள் பலி - இளைஞன் படுகாயம்

ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
றாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொழும்பு மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் தன்னாமுனை என்ற இடத்தில் புதன்கிழமை பிற்பகல் 31.05.2017 இடம்பெற்ற வீதி விபத்தில் இரு மாடுகள் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதோடு வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் படுகாயமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, வீதியில் மோட்டார் சைக்கிளில் அதி வேகமாகப் பயணித்த இளைஞன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குறுக்கறுத்த மாடுகளை மோதியுள்ளார். அவ்வவேளையில் மாடுகள் இரண்டும் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளன.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக போக்கு வரத்துப் பொலிஸார் தெரிவித்தனர். இசச்ம்பவம்பற்றி ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -