இன்று மக்காவுக்கு புனித உம்ரா கடமையை நிறைவேற்றச் செல்லும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் அமைச்சருமான கௌரவ றவூப் ஹக்கீம் அவர்களின் கொழும்பு இல்லத்திற்கு அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ. கபூர் அவர்கள் சென்று தலைவரிடம் 'சலாம்' சொல்லிவிட்டு வழியனுப்ப வந்த வேளையில் கூறியதாவது.
இக்கட்சி மூலம் வழங்கப்படவிருக்கின்ற தேசிய பட்டியல் எம்.பி க்கான நியமனத்தை முதலில் அட்டாளைச்சேனைக்கும் பின்பு தனக்கும் அது கிடைக்க வேண்டும் என எல்லாத் 'தூஆ' களுடனும் இதனையும் தவறாது சேர்த்து புனித கஃபத்துல்லாவில் வைத்து எனக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
இத் திடீர் விண்ணப்பத்தையும் கோரிக்கையையும் சற்ரேனும் எதிர்பாராத தலைவர் ஹக்கீம் அவர்கள் சிரித்துக் கொண்டு கபூர் அவர்களின் தோழில் தட்டி 'டோன்ற் வொறி' ( கவலைப்படாதே) எல்லாம் இறைவன் நாட்டப்படி நடக்கும் என்று கூறியதாக அங்கிருந்த வந்த ஒருவர் தெரிவித்தார்.
இந் நிகழ்வின் போது அம்பாறை மாவட்ட கட்சியின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலரும் பார்த்திருந்து புன்முறுவல் பூத்ததாகவும் அறியவருகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -