பாம்பை திரும்பிப் பார்த்த சாரதி, மின்சாரக் கம்பத்தில் மோதிய முச்சக்கரவண்டி, மூவர் வைத்தியசாலையில்

திருகோணமலையிலிருந்து வவுனியா சென்ற முற்சக்கர வண்டி மின் கம்பத்துடன் மோதியதில் முற்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகி மூவர் படுகாயமடைந்த நிலையில் இன்று (26) பிற்பகல் 3.30 மணியளவில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் தம்பலகாமம், தெலுங்கு நகர் பகுதியைச்சேர்ந்த ஆர்.நிரோஷினி (17வயது), விஜே நிர்மலா (23வயது), வீ.ராஜேஸ்வரி (39வயது) எனவும் தெரியவருகின்றது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

தம்பலகாமத்திலிருந்து வவுனியாவிற்கு கிறிஸ்தவ ஆலய வழிபாட்டுக்காக மொறவெவ பிரதேசத்தில் முற்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது முற்சக்கர வண்டியில் பயணித்த சிறுமியின் மேலில் பச்சிலைப்பாம்பு பாய்ந்துள்ளது.

இதனையடுத்து பாம்பு பாம்பு என கதறிய போது சாரதி திரும்பிய பார்த்த வேளை வேகமாக சென்ற முற்சக்கர வண்டி மின் கம்பத்துடன் மோதியதினாலேயே இவ்விபத்து இடம் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பாக மொறவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -