எம்.எச்.எம்.இப்ராஹிம்-
பொதுவாகவே எல்லோரும் இப்படித்தான்
பேசிக்கொண்டிருக்கின்றார்.
அதனால் முஸ்லிம் சமூகம் அடைந்த லாபம் என்ன என்றாவது யாராவது சிந்தித்தார்களா?
கடந்த காலங்களில் முஸ்லிம் தலைவர்களும், அமைச்சர்களும், முஸ்லிம் எம்பிக்களும், முஸ்லிம்களுடைய பிரச்சினைகளை பட்டியலிட்டு பாராளுமன்றத்தில் போட்ட கோசங்களை கேட்பதற்கும், பார்ப்பதற்கும் நன்றாகத்தான் இருக்கின்றது.
ஆனால், இந்த பாராளுமன்றத்தில் போடும் கோசங்களால் கிடைத்த லாபம் என்னவென்று தேடிப்பார்த்தால் "யானை சாப்பிட்ட விலாம்பழம்" போன்ற கதையாகத்தான் இவர்களுடைய செயல்பாடுகள் இருந்து வருகின்றது எனலாம்.
முஸ்லிம் அரசியல் வாதிகளின் செயல்பாடுகள், தனது பதவிக்கும் பட்டத்துக்கும் பங்கம் ஏற்பட்டுவிடாமல், விலாங்கு மீனைப்போன்று, " பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் " காட்டிக்கொள்வதைப்போல்,
இவர்களும் நடித்துக்கொண்டு தெறிகின்றார்கள் என்பதே உண்மையாகும்.
உண்மையான முஸ்லிம்களின் பிரச்சினைகளை பேசவேண்டியவர்களிடம் பேசித்தீர்க்க வக்கில்லாத இவர்கள், பாராளுமன்றத்தில் பேசிவிட்டால் எங்கள் கடமை முடிந்துவிட்டது என்ற நினைப்பில் இருக்கின்றார்ளோ என்ற ஐயம் எழுகின்றது.
சகல அதிகாரமும் பெற்றுள்ள இவர்கள் ஜனாதிபதியிடமோ, அல்லது பிரதமரிடமோ சில மணித்தியாலயங்களில் பேசி தீர்வை பெறவேண்டிய விடயங்களை எல்லாம், அவர்களிடம் பேசாமல் தட்டிக்கழிப்பதன் நோக்கம் என்னவென்று புரியாத புதிராகவே உள்ளது.
எப்போதும் எதிர்க்கட்சியில் இருப்பவர்கள்தான் தங்களுடைய பிரச்சினைகளை பாராளுமன்றத்தில்
பேசி சபாநாயகர் ஊடாக சில உரிமைகளை பெறுவதற்கு முயற்ச்சிப்பார்கள். ஏனென்றால் அவர்கள் ஆளும் கட்சியாக இல்லாமல் இருப்தனாலாகும்.
அதே நேரம், ஆளும் கட்சியில் அதிகாரத்தோடு இருப்பவர்கள் பாராளுமன்றத்தில் பேசி தீர்வை பெறுவதை விட, அதிகாரம் பொருந்தியவர்களிடம் நேரடியாக பேசி தங்களது பிரச்சினைகளை தீர்ப்பதுதான் நடைமுறையிலுள்ள வழக்கமாகும்.
இங்கே, நமது அரசியல் வாதிகள் தலைகீழாக நடந்து கொள்கின்றார்கள்,
இவர்களுடைய இப்படியான செயல்பாடுகள் முஸ்லிம் சமூகத்தையே கேவலப்படுத்தும் செயல்பாடுகள் என்றே கருதவேண்டியுள்ளது.
ஜனாதிபதியிடமோ, அல்லது பிரதமரிடமோ நமது பிரச்சினைகளை பேசும்போது, அவர்கள் எப்படி எம்மை நடத்துவார்களோ என்ற பயத்தின் காரணமாகத்தான் இவர்கள், அவர்களை நாடுவதை தவிர்க்கின்றார்கள் என்பதே உண்மையாகும்.
ஒருவேளை அவர்களுடன் இவர்கள் நேரடியாக பேசினால், அவர்களுக்குறிய சலூகைகள் மறுக்கப்படலாம், அல்லது அந்த கட்சியை விட்டு விலகி எதிர்க்கட்சியில் போய் அமரவேண்டிய நிலையும் வரலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே, இவர்கள் பாராளுமன்றத்தில் பேசுவதன் ஊடாக எங்களுக்கு இவ்வளவுதான் முடியும் என்று காட்டிக்கொண்டுள்ளார்கள் என்பதே உண்மையாகும்.
இவர்களின் இந்த நடவடிக்கைகள் நிச்சயமாக முஸ்லிம்களுக்கு தீர்வை பெற்றுத்தர போவதில்லை, மாறாக அவர்களின் பட்டங்களும் பதவிகளும்தான் பாதுகாக்கப்படும் என்பதே உண்மையாகும்.
ஆகவே முஸ்லிம்களின் பிரச்சினைகளை உள்ளார்ந்தமாக பேசித்தீர்த்து தறக்கூடிய தகுதியும் வீரமும் நமது அரசியல் தலைவர்களிடமும், அமைச்சர்களிடமும், எம்பிக்களிடமும் எள்முனையளவும் கிடையாது என்பதே தீர்க்கமான உண்மையாகும்.
எனவே, முஸ்லிம் சமூகம் இதனை கவனத்தில் எடுக்காமல், இவர்களுடைய செயல்பாடுகளை தட்டிக்கேட்காமல் அலட்சியப் படுத்துவார்களேயானால், எதிர்காலத்தில் நமது சமூகம் பல இன்னல்களையும், கஸ்டங்களையும் சந்திக்கவேண்டிவரும் என்பதே நிதர்சனமான உண்மையாகும்...