கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தில் பதற்றமான நிலை - ஒருவர் தற்கொலை

கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தில் சற்றுமுன்னர் ஒருவித பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புறக்கோட்டை ரயில் நிலையத்தின் மலசல கூடத்தில் நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதையடுத்து இந்த பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

45 வயதான நபர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், குறித்த நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். எவ்வாறாயினும், குறித்த நபர் தற்கொலை செய்துக்கொண்டமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -