கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தில் சற்றுமுன்னர் ஒருவித பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புறக்கோட்டை ரயில் நிலையத்தின் மலசல கூடத்தில் நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதையடுத்து இந்த பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
45 வயதான நபர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், குறித்த நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். எவ்வாறாயினும், குறித்த நபர் தற்கொலை செய்துக்கொண்டமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.