நாளை செவ்வாய் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவருகிறது

ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

2016
ஆம் ஆண்டு டிசெம்பெர் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் மார்ச் 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அன்றைய தினத்தில் பரீட்சார்த்திகள் இணையத்தின் மூலம் தங்களது பெறுபேறுகளை அறிந்து கொள்ளலாம் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு (2016-டிசெம்பெர்) 5669 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையில் சுமார் 7 இலட்சம் பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

இதேவேளை, 2017ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசெம்பெர் மாதம் 12ஆம் திகதி ஆரம்பமாகி டிசெம்பெர் 21ஆம் திகதி முடிவடையவுள்ளது.

இவ்வாண்டின் கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர் தரப் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி ஆரம்பமாகி செப்ரெம்பெர் 02ஆம் திகதி வரையும் இடம்பெறவுள்ளது.

இந்தப் பரீட்சையின் முடிவுகள் டிசெம்பெர் மாதம் 27ஆம் திகதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இவ்வாண்டுக்கான ஐந்தாந்தர புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்தப் பரீட்சை முடிவுகள் ஒக்டோபெர் 5ஆம் திகதி வெளியிடப்படும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -