அப்பத்துக்கு ஆசைப்பட்டு குரங்கிடம் நீதிகேட்டு ஏமாந்த நிலை - கிழக்கு முதலமைச்சர்

ந்த நாட்டில் அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் சிறுபான்மையினர் கட்சிகள் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டியது காலத்தின் கட்டாயமாக அமைந்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

சிறுபான்மையின கட்சிகளுக்கிடையில் அரசியல் தீர்வு தொடர்பில் முரண்பாடுகள் ஏற்படுமானால் இறுதியில் அது அனைத்து தரப்பினருக்கும் ஏமாற்றமாகவே அமையும் என முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். தற்போது முன்னெடுக்கப்படும் அரசியல் தீர்வுத் திட்டத்தின் சாத்தியத்தன்மை குறித்து கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டிடம் வினவியபோதே அவர் இதனைக் கூறினார்.

தமக்குரிய தீர்வு தொடர்பில் சிறுபான்மை கட்சிகளிடையே முரண்பாடுகள் இருக்கும் பட்த்தில் தீர்வொன்று சாத்தியமாகும் காலகட்டத்தில் இந்த முரண்பாடுகள் காரணமாக முன்வைக்கப்பட்டு தீர்வுகள் காலந் தாழ்த்தப்படுவதற்கு காரணமாக அமையும் என கிழக்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்,

இறுதியில் ஒரு அப்பத்தை குரங்கின்கையில் கொடுத்து நீதிகேட்டு ஏமாந்த பூனைகளின் நிலையே சிறுபான்மை சமூகத்துக்கு ஏற்படும் என அவர் கூறினார். ஒரு அப்பத்தை தமக்குள் இணக்கப்பாட்டிற்கு வந்து சம்மாக பிரித்துக்கொள்ள முடியாமல் இறுதியில் சிறு துண்டு அப்பம் கூட கிடைக்காமல் வீடு திரும்பிய பூனைகளின் கைசேத நிலை ஏற்படாமல் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என கிழக்கு முதலமைச்சர் தெரிவித்தார்.

சிறுபான்மைத்தரப்புக்கள் ஒரு மேசையில் அமர்ந்து தமது சமூகங்களுக்குரிய தீர்வுகளை அடையாளப்படுத்தி அதில் இருக்கும் சந்தேகங்களையும் முரண்பாடுகளையும் தீர்த்துக்கொள்ள முன்வரவேண்டும். அதன் பின்னர் தீர்வுக்கான தமது கோரிக்கைகளை முன்வைத்து சிறுபான்மை சமூகங்கள் ஒரேகுரலில் அரசாங்கத்துக்கு அழுத்த்த்தை கொடுப்பதன் ஊடாக நிரந்தரமான தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள முடியும்.

பல இனவாத சக்திகள் சிறுபான்மையினருக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய அரசியல் தீர்வினை கிடைக்கப் பெறாமல் செய்வதற்கு இன்று சிறுபான்மையினருக்குள் பிளவுகளை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர்​. எனவே இது குறித்து அவதானமாக இருந்து சிறுபான்மையினர் ஒன்றிணைந்து அழுத்த்த்தை பிரயோகித்து தீர்வினைப் பெற்றுக் கொள்ள முன்வரவேண்டும் என கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -