சிறையிலுள்ள விமல் வீரவங்சவின் சுகதுக்கம் விசாரிக்கவென இன்று சிறைச்சாலைக்கு விஜயம் செய்த பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் சமல் ராஜபக்ஷ கலந்துகொண்டது மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பதிலாகவென கூறப்படுகின்றது. இது குறித்து தங்களது கருத்து என்னவென கேட்கப்பட்டபோதே மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைவதென்பது ஒரு கனவாகும். அது ஒருபோதும் நடக்காது எனவும் கூறினார்.
சரத்பொன்சேகாவை சிறையில் இட்டது கடந்த அரசாங்கம் செய்த தவறு என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறித்து அவரிடம் ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோது,
அது நாமலின் கருத்து. சரத் பொன்சேகாவை சிறையில் இட்டது அவர் செய்த தவறுக்காக. அவருக்கு சிறையில் அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டன. சூடான நீரும் கூட அவருக்கு வழங்கப்பட்டது எனவும் மஹிந்த ராஜபக்ஷ இதற்குப் பதிலளித்தார்.டைலிசிலோன்