சமல் ராஜபக்ஷ., நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் கருத்துக்கள் என்னுடையதல்ல – மஹிந்த

மல் ராஜபக்ஷ ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் கலந்துகொண்டதும், நாமல் ராஜபக்ஷ சரத்பொன்சேகா குறித்து கூறிய கருத்தும் என்னுடையது அல்ல. அதற்கு அவர்களே பொறுப்பு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

சிறையிலுள்ள விமல் வீரவங்சவின் சுகதுக்கம் விசாரிக்கவென இன்று சிறைச்சாலைக்கு விஜயம் செய்த பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் சமல் ராஜபக்ஷ கலந்துகொண்டது மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பதிலாகவென கூறப்படுகின்றது. இது குறித்து தங்களது கருத்து என்னவென கேட்கப்பட்டபோதே மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைவதென்பது ஒரு கனவாகும். அது ஒருபோதும் நடக்காது எனவும் கூறினார்.

சரத்பொன்சேகாவை சிறையில் இட்டது கடந்த அரசாங்கம் செய்த தவறு என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறித்து அவரிடம் ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோது,

அது நாமலின் கருத்து. சரத் பொன்சேகாவை சிறையில் இட்டது அவர் செய்த தவறுக்காக. அவருக்கு சிறையில் அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டன. சூடான நீரும் கூட அவருக்கு வழங்கப்பட்டது எனவும் மஹிந்த ராஜபக்ஷ இதற்குப் பதிலளித்தார்.டைலிசிலோன்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -