தொழிலாளர் தேசிய சங்கத்தின் விசேடக்கூட்டம்

நோட்டன் பிரிட்ஜ்  மு.இரமச்சந்திரன்-

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டக்கமிட்டித் தலைவர்களுக்கான விசேட கூட்டமொன்று நாளை 5 ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு அட்டன் டி.கே.டப்ளியு கலாசார மண்டபத்தில் இடம் பெறவுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பிலிப் தெரிவித்தார்.
> தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலையக புதிய கிராமங்கள் , உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரத்தின் தலைமையில் இந்த விசேடக்கூட்டம் இடம் பெறவுள்ளது.
> இந்தக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் , மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன் , சிங்.பொன்னையா , சரஸ்வதி சிவகுரு உட்பட தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தர்கள் , அமைப்பாளர்கள் , இணைப்பாளர்கள் , தோட்டக்கமிட்டித் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்று எஸ்.பிலிப் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -