உலக வங்கியினால் இலங்கையின் சுகாதார அமைச்சுக்கு வழங்கவிருக்கும் உதவி திட்டங்களுக்கான திட்டமிடல் கருத்தரங்கு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகர்த்த மண்டபத்தில் நடைபெற்றது.
இவ் நிகழ்வுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரத்தின அவர்களும் சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் அவர்களும் உலக வங்கியின் இலங்கைக்கான உயர் அதிகாரிகளும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இங்கு சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் அவர்கள் உரையாற்றுகையில்;
"கிழக்கு வடக்கு மாகாணங்களில் உலக வங்கியின் உதவியால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த சுகாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தடைப்பட்டு இருப்பதனை சுற்றி காட்டியதுடன் அதனை முடிப்பதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்றும், இலங்கையில் பரவி வரும் டெங்கு போன்ற நோயினை கட்டுப்படுத்துவதற்கு இவ் உலக வங்கியின் வேலைத்திட்டத்தில் உதவிகளை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்".