எனது கனவருக்கு நீதி பெற்றுத்தராத அரசு - எக்னெலிகொட மனைவி

கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் எனது கணவர் குறித்து எந்த தீர்வையும் இந்த அரசாங்கம் பெற்றுத் தரவில்லை என ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொட ஜெனீவாவில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு தன்னுடைய சாட்சியங்களை அவர் பதிவு செய்தபோதே மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் எனது கணவரின் பிரச்சினையை முன்னிலைப்படுத்தி தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்திருந்த போதிலும், தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர் தன்னை கைவிட்டுவிட்டனர் எனவும் கூறியுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -